இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு 1.6 கோடி தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி – மத்திய அரசு தகவல்!!

0

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தடுப்பு மருந்து ஏற்றுமதி

இந்தியாவில் கொரோனா அவசரகால பயன்பாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடுப்பு மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவரை இலங்கை, நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரோனா மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சில நாடுகளுக்கு இலவசமாகவும் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் இந்தியாவில் தயாராகும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இரண்டாவது மருந்து தொகுப்பாக 1.6 கோடி தடுப்பு மருந்துகளை வரும் ஜூன் மாதத்துக்குள் பாகிஸ்தான் பெறவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதன்படி, இந்தியாவின் தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்பு சர்வதேச கூட்டணி (காவி) என்ற திட்டத்தின் கீழ், 4.5 கோடி மக்களுக்கு தேவையான இலவச மருந்துகளை பாகிஸ்தான் அரசு பெற்றுக்கொள்கிறது. முன்னதாக சீனாவிலிருந்து பெறப்பட்ட கேன்சினோ என்ற தடுப்பு மருந்துகளை பாகிஸ்தானில் ஒருவர் பெற வேண்டுமென்றால் 2 ஆயிரம் வரை செலவு ஏற்படும் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here