Tuesday, May 14, 2024

குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

Must Read

பரவலாக பெய்துவரும் மழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேரருவியில் அதிகமான நீர்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு:

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் மிதமாகவே விழுவதால் அங்கு பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் பேரருவியில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவதால் மக்களின் பாதுகாப்பு கருதி அங்கு யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே சுற்றுலா பயணிகள் குளிர்,மழை என எதையும் பொருட்படுத்தாமல் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

குளிப்பதற்கு தடை:

ஏற்கனவே பல மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை சமீபத்தில் தான் விலக்கப்பட்டது. அதன்பிறகு தொடர் மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பிறகு நிலைமை கொஞ்சம் சரியானதும் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான மக்கள் அருவிகளில் குளித்து வருகின்றனர்.

‘புத்தாண்டு இரவில் பொதுமுடக்கம் இல்லை’ – மாநில அரசு அறிவிப்பு!!

பொதுவாக விடுமுறை தினங்களில் அருவிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவர். நாளை புதுவருடத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் அருவிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா?? வெளியான முக்கிய தகவல்!!

பாக்கியலட்சுமி சீரியல் சமீப காலமாகவே சுவாரசியம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இதனை விறுவிறுப்பாக்கும் விதமாக ராதிகாவின் கர்ப விஷயத்தை லீக்அவுட் செய்துள்ளனர். இதனால் வீடே...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -