தற்போது கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று தமிழ்நாட்டின் சென்னை உட்பட 4 மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.
கொரோனா:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா என்னும் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் மக்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. சில பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட சில நாடுகள் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கி அதனை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தடுப்பூசி ஒத்திகை:
தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை சில தினங்களுக்கு முன்பு 4 மாநிலங்களில் நடைபெற்றது. இதில் தடுப்பூசியை பதப்படுத்தும் முறை, மக்களுக்கு செலுத்தும் முறை போன்றவற்றை கற்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகின. தற்போது இன்று தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி உள்ளது. மேலும் இந்த ஒத்திகை காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!
மேலும் இந்த ஒத்திகை சென்னை, நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை அரசு மருத்துவமனை, நிலக்கோட்டை சுகாதார நிலையத்தில் நடைபெறும். மேலும் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி சமாதானபுரம் சுகாதார நிலையம், கோவை அரசு மருத்துவக்கல்லூரி, ஐஎஸ்ஐ மருத்துவமனை, பிஎஸ்ஜி மருத்துவமனை, சூலூர் மருத்துவமனை, புலுவம்பட்டி அரசு சுகாதார நிலையம் மற்றும் SLM ஹோம் சுகாதார நிலையம் போன்ற இடங்களில் வைத்து நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.