கண்ணம்மா சென்னையில் இருக்கும் விஷயத்தை சொல்லிவிடும் துளசி – சந்தோஷத்தில் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தேடி அலைந்து கடைசியாக அகிலன் போட்டோவில் ஓரமாக இருக்கும் கண்ணம்மாவை கண்டுபிடித்து விடுகிறார். இந்நிலையில் கண்ணம்மாவை தேடி செல்லும் சௌந்தர்யாவிற்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கண்ணம்மாவை தேடி கிராமத்திற்கு சென்றிருந்தார். துளசியை பார்த்த அவர் கண்ணம்மாவை பற்றி கேட்டபோது எதையும் சொல்லாமல் மறைத்து விட்டார். சௌந்தர்யா எவ்வளவு கெஞ்சியும் துளசி சொல்லவும் இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

துளசி தனது கணவரிடம் நடந்த உண்மையை சொல்ல அவருக்கும் சந்தேகமாகிறது.  அவங்க எவ்வளவு நல்லவங்களா இருந்த கண்ணம்மாவை தேடி இவ்வளவு தூரம் தேடி வந்திருப்பாங்க என்று சொல்ல துளசிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடுத்ததாக சௌந்தர்யாவும் ஹேமாவும் கோவிலுக்கு செல்கின்றனர்.

சௌந்தர்யா கண்ணம்மா எப்படியாவது கிடைத்து விட வேண்டும் என்று கண்ணம்மா பேரில் அர்ச்சனை செய்கிறார். அப்பொழுது துளசி சௌந்தர்யாவிற்கு கால் செய்கிறார். கண்ணம்மா சென்னையில் தான் இருக்கிறார் என்ற உண்மையை சொல்லிவிடுகிறார்.

குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

இதனால் சந்தோஷமடையும் சௌந்தர்யா சாமி கும்பிட்டு விட்டு ஹேமாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அடுத்ததாக கண்ணம்மாவை காட்ட லக்ஷ்மியை ஸ்கூலில் சேர்ப்பது விஷயமாக பேசிகொண்டுள்ளனர். லட்சுமி தான் பெரிய ஸ்கூலில் தான் படிப்பேன் அப்பொழுது தான் கலெக்டர் ஆக முடியும் என்று சொல்ல கண்ணம்மா கதறி அழுகிறார்.

என்னால உனக்கு எதுவுமே பண்ண முடியலையே என்று அழுக லட்சுமி தான் சின்ன ஸ்கூலிலேயே படித்து கொள்வதாக சொல்கிறார். மேலும் லக்ஷ்மிக்கு கலக்டர் ஆகி காரில் வந்து இறங்குவது போல காண்கிறார்.

அப்பொழுது திடீரென கண்ணம்மா இறுமியத்தால் கனவு கலைந்து எழுகிறார். தன் அம்மாவிடம் கனவை பற்றி சொல்ல கண்ணம்மாவும் இதே மாதிரி எப்போதுமே லட்சியத்தோடு இருக்க வேண்டும் என்று கூக்கமளிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here