கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலும் இந்தியாவிலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக பணக்கார நாட்டுகாளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.
மத்திய சுகாதாரத்துறை
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 266598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 331 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
நியூஸிலாந்து போல் சென்னையையும் மாற்றுவோம் – அமைச்சர் ஆர்பி உதயகுமார்..!
இதுவரை பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 129215 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.5 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 129917 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 88528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 33229 பேருக்கும், டெல்லியில் 29943 பேருக்கும், குஜராத்தில் 20545 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.