STOP CORONA – படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்..!

0
Hospital
Hospital

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்து உள்ளன.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தின் தலைநகராக இருந்த சென்னை தற்போது கொரோனா வைரஸின் தலைநகரமாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு அங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. எனவே அங்கு கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டு இருந்தது. இது தொடர்பாக 400 தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகளிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நியூஸிலாந்து போல் சென்னையையும் மாற்றுவோம் – அமைச்சர் ஆர்பி உதயகுமார்..!

ஆலோசனை முடிவில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. படுக்கை வசதிகள் குறித்த விபரத்தை stopcorona.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவேற்றவும் தனியார் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here