உலகளவில் 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு, 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

0

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

37 ஆயிரத்தை தாண்டிய பலி..!

உலகளவில் இதுவரை 7,85,807 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக உள்ளது. மேலும் இதுவரை 1,65,659 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்காவும், அதிகம் உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 1,64,253 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 3,167 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1,01,739 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 11,591 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 87,956 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 7,716 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 81,518 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 3,305 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

இந்தியாவின் நிலைமை..!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை 1,251 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 32 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க நாம் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருப்பதை தவிர வேறு வழியில்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here