இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கல்லூரி நிறுவனங்களும் பூட்டப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல்கள் உள்ளன. எனவே கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு..!
ஏற்கனவே இந்தியா முழுவதும் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வுகள், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள் மற்றும் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் வரும் நாட்களில் வைரஸின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,
ஊரடங்கு உத்தரவு, ஏப்ரலில் முடிந்தாலும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. அதேபோல, தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, சிறிது அவகாசம் தேவைப்படும். எனவே, பருவ தேர்வுகளை, மே மாதத்திற்கு தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள், அதிகம் உள்ளன என கூறினர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |