கொரோனா ஆன்டிபாடியை கண்டறியும் எலிசா கிட் கண்டுபிடிப்பு – ஐசிஎம்ஆர் புதிய சாதனை..!

0

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் உள்ள ஒருவரின் உடலில் அதனை அழிக்கும் ஆன்டிபாடி உருவாகிறதா என்பதை கண்டறிவதற்கான ரேபிட் கிட் கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளது.

ரேபிட் கிட் ரிடெர்ன்:

கொரோனா பரவலை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கருவிகள் சரியான முடிவுகளை தராத காரணத்தால் அனைத்தையும் திருப்பி அனுப்பியது இந்திய அரசு. இந்நிலையில் கொரோனா தாக்கிய ஒருவரின் உடலில் அதன் எதிர்ப்பு சக்தியான ஆன்டிபாடி உருவாவதை கண்டறியும் கருவியை இந்திய வைரலாஜி நிறுவனமும் (என்ஐவி) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (ஐசிஎம்ஆர்) இணைந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது.

எலிசா டெஸ்ட் கருவி:

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவியின் மூலம் இரண்டரை மணிநேரத்தில் 90 மாதிரிகளை பரிசோதிக்க முடியும் எனவும், இது கொரோனா பரிசோதனையில் புதிய மைல்கல்லாக அமையும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிகள் விரைந்து முடிக்கப்படும். மும்பையில் இரு இடங்களில் இதன் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதனால் ஜைடஸ் காடிலா நிறுவனத்துடன் இணைந்து, ஐசிஎம்ஆர் அதிகளவிலான உற்பத்தியில் ஈடுபட உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here