தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!

0
Rain
Rain

தென்மேற்குப் பருவமழை வருகின்ற மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்தபடி உள்ளது. அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டு உள்ளது.

திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தமான் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மே 13ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், அந்தமான் நிகோபார் பகுதிகளில் வரும் மே 16ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here