ஐபிஎல் போட்டிகளை நாங்கள் நடத்துகிறோம் – ஐக்கிய அரபு அமீரகம் விருப்பம்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்த தயாராக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தெரிவித்து உள்ளது.

ஐபிஎல் போட்டிகள்:

இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் சீசன் 13 கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. இருப்பினும் செப்டம்பர் மாதம் நடக்கலாம் எனவும் வெளிநாடுகளில் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே 2014ம் ஆண்டு பொதுத்தேர்தல் காரணமாக 20 ஐபிஎல் போட்டிகள் UAE இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ பொருளாளர் அருண் துமல், உலகமே ஸ்தம்பித்து போய் உள்ள இந்த வேளையில் வீரர்கள் எங்கும் பயணம் செய்ய முடியாது, இதனால் இப்பொது எந்த முடிவையும் எடுக்க முடியாது என தெரிவித்து விட்டார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here