சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 47 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
டிசம்பர் முதல் தொடங்கி..!
சீனாவின் ஹவான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் முதலில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் பரவிய இந்த வைரஸினால் இதுவரை 1,10,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கையும் 4000ஐ தாண்டி உள்ளது.
இந்தியாவில் 47 பேர்..!
இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் தற்போது தீவிரமடைந்து உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இதுவரை 47 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தில்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம், ஜம்மு, கர்நாடகாவில் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |