சீனாவில் தொடங்கி தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள உயிர்க்கொல்லி கொரோனா வைரஸினால் இதுவரை 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆசியாவில் மட்டும் 3,064 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டு உள்ள இதை பற்றிய ஆய்வறிக்கை நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
உலகம் முழுவதும் 1.5 கோடி உயிரிழப்புகள்:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் 1.5 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 10 லட்சம் பேர் இந்த வைரஸினால் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றையும் தெரிவித்து உள்ளது.
இந்த வைரஸ் வரும் 1 வருடத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் உலகம் முழுவதும் 6.8 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
உலக பொருளாதார பாதிப்பு:
கொரோனா வைரஸினால் உலக உலக பொருளாதாரத்தில் ரூ.161 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் உலகளாவிய ஜிடிபி 0.1-0.4 வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் இதுவரை உலகின் 104 நாடுகளில் பரவி உள்ளது. இதனால் 29 கோடி மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |