50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

0

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்கா தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,292 பேர் பேர் உயிரிழந்து உள்ளதால் மொத்த உயிர் இழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

210 நாடுகள் பாதிப்பு:

உலகெங்கிலும் 210 நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸால் மிகப்பெரிய உயிர்சேதமும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு நாளுக்கு நாள் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிகின்றனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.

அமெரிக்கா நிலவரம்:

அமெரிக்காவில் ஒரே நாளில் 30,812 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,79,529 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 85,624 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 2,292 பேர் உயிரிழந்து உள்ளதால் பலி எண்ணிக்கை 49,812 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் கடும் மன உளைச்சல் மற்றும் கவலையில் உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here