தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். இவரின் முக பாவனைகளுக்கே ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்நிலையில் தனது வீட்டின் அருகிலுள்ள தெருக்களில் திரியும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வரும் நிகழ்வு அவரின் உருகிய மனதை காட்டுகிறது.
உணவும், நீரும்:
ரஷ்மிகா மந்தனா தனது வீட்டின் அருகில் இருக்கும் தெருக்களுக்கு தினமும் செல்கிறார். கூடவே தேவையான உணவுகளையும், தனது உதவியாளர்களையும் அழைத்துச் செல்கிறார். அங்கு சுற்றித்திரியும் நாய்களுக்கு அவர் உணவு வழங்குகிறார். இந்த நல்ல எண்ணத்தை பலரும் பாராட்டுகின்றனர்.
இது பற்றி கூறும் ரஷ்மிகா, இந்த ஊரடங்கு சமயத்தில் சிரமப்படும் வாயில்லாத ஜீவன்களின் வேதனையை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களால் அதனை விவரிக்க முடியாது. பூனைகளுக்கு சோறும், நாய்களுக்கு உணவும், நீரும் கொடுங்கள் என்கிறார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |