நாடு முழுவதும் 33 கோடி ஏழை மக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் – மத்திய அரசு நிதியுதவி..!

0

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அன்றாட கூலிகள் மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பிரதமரின் ஏழைகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 33 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதியமைச்சகம் உதவி:

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நிதியுதவிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவில் இந்த நிதியுதவி திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மேற்பார்வையில் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை நாடு முழுவதும் 33 கோடி பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து 235 கோடி ரூபாய் அளவில் நிதியுதவி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதியுதவிகள் விபரம்:

  • பிரதமரின் விவசாயிகளுக்கான திட்டத்தின் கீழ் 8 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் தலா 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
  • ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள 20.05 கோடி பெண்கள் வங்கிக்கணக்கில் தலா 500 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10,025 கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது.
  • வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவை பெண்கள் என, 2.82 கோடி பேருக்கு 1,400 கோடி ரூபாய் அளவிற்கு உதவித் தொகை வழங்கப்பட்டு உள்ளது.
  • உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், 2.66 கோடி பேருக்கு, இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இந்த விபரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here