இஸ்ரேல் நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த ஆண்டு சீனாவில் அதிகமாக பரவிய கொரோனா என்ற நோய் கிருமி அனைத்து நாடுகளுக்கும் வேகமாக பரவியது. அது தற்போது உள்ள நிலவரப்படி, உலகில் உள்ள 2 கோடி பேரை பாதித்துள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இஸ்ரேல் நாட்டில் நடப்பு நிலவரப்படி, 80 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதித்துள்ளது. அதில் 500 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அந்த நாட்டு அரசு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வந்தது.
புதிய தடுப்பு மருந்து:
தடுப்பு மருந்து குறித்து இஸ்ரேல் அரசு கூறியது என்னவென்றால், ” நாங்கள் கொரோனாவிற்கான மருந்தை தயாராக வைத்துள்ளோம். அதனை மனிதர்களுக்கு செலுத்த இந்த இலையுதிர் காலத்தில் வரும் விடுமுறை தினங்களை பயன்படுத்தவுள்ளோம்.”
நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மத்திய அரசு ஆலோசனை!!
இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் கொரோனா தடுப்பு மருந்தினை தயாரிக்கும் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அவர் கூறியதாவது ” தற்சமயம் எங்களிடம் கொரோனா தடுப்பு மருந்து உள்ளது. தகுந்த பாதுகாப்புடன் அதனை செய்ய காத்திருக்கிறோம். இந்த விடுமுறை தினங்களில், மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ய உள்ளோம்.” என்று கூறியுள்ளார்.