நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மத்திய அரசு ஆலோசனை!!

0
school students
school students

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை படிப்படியாக செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆலோசனையில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் பூட்டப்பட்டு உள்ளது. இந்த காரணத்தால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் தயாராகி வருகின்றன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Schools reopen
Schools reopen

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டு உள்ள பள்ளிகளை செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரத்தை வைத்து மாநிலங்கள் தனித்தனியாக பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்து கொள்ளவும் அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. செப்டம்பர் 1 முதல் படிப்படியாக தொடங்கி 15 நாட்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

2021 ஜூலை வரை வீட்டில் இருந்தே வேலை – 1000 டாலர் வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு!!

நவம்பர் 14 வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆகஸ்ட் மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here