குக் வித் கோமாளியின் இறுதி சுற்றில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?? கண்கலங்க வைத்த நிகழ்வு!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டம் முடிவடைந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் யாருமே பார்க்காத ஒரு விஷயம் நடந்தேறியது. அதாவது அஸ்வின் பாலா இடையே நடந்தது தான் அது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன சீசனை விட இந்த சீசன் சக்கை போடு போட்டது. அஸ்வின், ஷிவாங்கி தான் அதிகமாக இந்த சீசனில் புகழடைந்தது. மக்களுக்கும் இவர்களின் ஜோடி பிடித்து போக இந்த விஜய் அவார்ட்டிலும் பெஸ்ட் ஜோடி என்ற விருதையும் பெற்றனர். ஆனால் கடைசியில் அஸ்வின் ஜெயிப்பார் என்று நினைத்திருந்த அனைவர்க்கும் அஸ்வின் 3 வது பரிசு வாங்கியது ஏமாற்றத்தை தான் தந்தது.

ஆனாலும் கனி ஜெயித்தது அனைவருக்குமே சந்தோசத்தை தான் அளித்தது. இந்த இறுதி போட்டியில் போன சீசனை விட அதிக பரிசுகள் கொடுக்கப்பட்டிருந்தது. கோமாளிகளுக்கும் ரூ.1 லட்சம் தரப்பட்டது. அதில் புகழும், சுனிதாவும் தான் அந்த ரூ.1 லட்சத்தை பெற்று சென்றனர். ஆனால் பாலாவுக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்பது தான் பெரிய சோகமே.

போன சீசனில் வனிதாவை ஜெயிக்க வைத்ததே பாலா தான். இந்த தடவை அவருக்கு கொஞ்சம் கூட எதுவுமே கிடைக்கவில்லை. இதனை காமெடியாக பாலா சொன்னாலும் பாலாவுக்கு இது சோகமாகவே இருந்தது. இதனை கவனித்த அஸ்வின் அவர் அருகில் சென்று உனக்கு என்ன வேணும்னு என்கிட்ட சொல்லு என்று கேட்டார். அதற்கு பாலாவும் படத்திற்கு கூட்டிட்டு போனால் போதும் என்று கூறியிருந்தார்.

இந்த நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்தது. குக் வித் கோமாளிக்கு பிறகு தனது வேலை இல்லை என்பதையும் அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார். பாபா மாஸ்டர் தனக்கு கிடைத்த பத்தாயிரத்தை பாலாவுக்கு தருவதாக சொல்லி இருந்தார். அஸ்வின், மாஸ்டரின் இந்த செயல் பலரையும் வியக்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here