‘மருத்துவர்களாலே கொரோனா அலையை கணிக்க முடியவில்லை’ – தலைமை வழக்கறிஞர் விளக்கம்!!

0

கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் மிக அதிகமான அளவில் இருந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்த நிலவரத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினவியுள்ளார். தற்போது அதற்கு தலைமை வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.

கொரோனா அலை:

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு வீசிய முதல் அலையை விட தற்போது வீசும் இரண்டாவது அலை மிக கடுமையாக மக்களை பாதித்து வருகிறது. நேற்று மட்டுமே தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் தமிழகத்தில் தற்போது கொரோனாவிற்கான தடுப்பூசி பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இருந்தும் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினவியுள்ளார். தற்போது இதற்கு தலைமை நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

இனி சனி, ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு?? முதல்வர் திட்டவட்டம்!!

அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கைமீறி சென்றுவிட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று எந்த நிலையில் உள்ளது என்பது மருத்துவ நிபுணர்களால் கூட கணிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நீதிமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மேற்கொள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here