Friday, April 26, 2024

‘அரியரை வென்ற அரசனே’ – எடப்பாடிக்கு போஸ்டர் அடித்த கல்லூரி மாணவர்கள்!!

Must Read

கொரோனா வைரஸால் போடப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. தற்போது கல்லூரிகளுக்கு அரியர் வைத்த மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அரியர் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்துள்ளனர்

மாணவர்கள் போஸ்டர்

மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் எழுதப்படாமல் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் கல்லூரிகளுக்கு இறுதியண்டை தவிர மற்றவர்களுக்கும் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. அதனை அடுத்து கல்லூரியில் அரியர் வைத்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களும் பாஸ் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

poster
poster

முதல்வரின் இந்த செயலை பாராட்டி கல்லூரி மாணவர்கள் அவருக்கு போஸ்டர் அடித்து நன்றி செலுத்தியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த போஸ்டர்களில் முதலமைச்சரின் உருவப்படத்தை வைத்து மாணவர்களின் பாகுபலியை, அரியரை வென்ற அரசனே என்று போடப்பட்டுள்ளது. இவ்வாறு போஸ்டர்களை ஒட்டி மாணவர்கள் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs SRH 2024: மைதானம் சுழற்ப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் சென்னை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -