போலி சாமியார் நித்யானந்தாவின் கைலாச நாட்டில் வீர விளையாட்டான “ஜல்லிக்கட்டு” நடத்த அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று மதுரையில் உள்ள விளையாட்டு கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தாவின் கைலாசம்:
சில வருடங்களுக்கு முன் போலி சாமியார் நித்யானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி நாட்டை விட்டு தலைமறைவானார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அவர் எங்கு உள்ளார், அவர் உருவாக்கிய கைலாசம் எங்கு உள்ளது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. போலீசாரும் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
நிலைமை இப்படி இருக்க விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டிற்கான புதிய நாணயங்களையும், பொருளாதார கொள்கை மற்றும் ரிசர்வ் வங்கி தொடங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. சமூக வலை தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவியது.
பலரும் எழுதிய கடிதம்:
இந்த செய்தியினை அடுத்து மதுரையில் உள்ள டெம்பிள் சிட்டி உணவக உரிமையாளர் அங்கு ஹோட்டல் நடத்த அனுமதி தர வேண்டும் என்று கேட்டு இருந்தார். இதற்கு நித்யானந்தா உணவகம் நடத்தி கொள்ளலாம் என்று பதிலளித்து இருந்தார். டெம்பிள் சிட்டி உரிமையாளரை அடுத்து பலரும் இது போன்ற கோரிக்கைகளை வைத்து வந்தனர். தற்போது, மதுரையை சேர்ந்த வீர மரபு விளையாட்டு கழகம் நித்யனந்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
சூப்பரான வறுத்து அரைத்த மட்டன் கிரேவி!!
அந்த கடிதத்தில் 2021 ஆண்டு கைலாச நாட்டில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான “ஜல்லிக்கட்டு” நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். நம் நாட்டில் கொரோனா பரவல் இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாதோ என்று எண்ணி அவர்கள் இப்படி ஒரு கடிதத்தை நித்யானந்தாவிற்கு அனுப்பி உள்ளனர்.
போலீசார் வழக்குப்பதிவு:
போலி சாமியார் நித்யானந்தா எங்கு உள்ளார் என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை கூடுதலாக அவர் உருவாகியுள்ள அவரது நாடான “கைலாசம்” எங்கு உள்ளது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், இவர்கள் இப்படி அவருக்கு கடிதம் அனுப்புவதும் அவர் இதற்கு பதியளிப்பதும் அனைவர் மத்தியிலும் கேலிக்குரிய விஷயமாக கருதப்பட்டு வருகிறது. இப்படி அவர்க்கு கடிதம் எழுபவர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.