Monday, April 29, 2024

இரவு 10 மணிவரை கடைகளை திறந்திருக்க அனுமதி – தமிழக முதல்வர் உத்தரவு!!

Must Read

பண்டிகை காலம் துவங்க உள்ளதால் தமிழகத்தில் உள்ள கடைகள் இனி வரும் நாட்களில் இரவு 10 மணி வரை செயல்படலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய அரசு சார்பாக பொது முடக்கம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. பின், மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இன்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் பொது முடக்கத்தினை சரியாக பின்பற்றுவதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழக அரசின் பொது முடக்க கட்டுப்பாடுகளை பின்பற்றி தான் காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தேநீர் கடைகள் இயங்கி வருகின்றது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டும், தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டும் தமிழக அரசு வரும் 22ம் தேதி முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவிப்பு:

இது குறித்து தமிழக முதல்வர் கூறியதாவது,”தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாலும், சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகளாலும், தற்போது கொரோனா நோய் கட்டுக்குள் உள்ளது. வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் வரும் 22 தேதி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம். மக்கள் இந்த பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பிராவோ – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த அதிர்ச்சி!!

”கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை மக்கள் முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -