தற்போது விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதியில் ஒரு நபர் வெளியேற்றபடுவார். கடைசியில் வெளியேறாமல் இருக்கும் நபர் தான் பிக் பாஸ் 4 பட்டத்தை வெல்வார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அதன் நான்காவது வாரத்தில் நுழைய இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு, சண்டை, கலகலப்பு, அழுகை, கோபம் என அனைத்து அம்சங்களும் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு வாரமும் மக்களின் ஓட்டின் படி குறைவான ஒட்டு வாங்கிய நபர் வெளியேற்றப்படுவார். முதல் வாரம் எந்தவொரு நபரும் வெளியேற்ற பட மாட்டார்கள் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததது.
பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களில் பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்தவருக்கு ஒரு நாளைக்கு 50 வாக்குகள் வரை பதிவு செய்யலாம். இரண்டாவது வார நாமினேஷனில் ரேகா குறைவான வாக்குகள் வாங்கி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இப்போது மூன்றாவது வார நாமினேஷனில் ஐந்து நபர்கள் உள்ளனர். பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி,ஆரி,அனிதா,ஆஜீஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிமாகி கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் 4 வாக்குகளின் ஆன்லைன் வாக்குப்பதிவு ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை செயலில் உள்ளது. முடிவுகள் பின்னர் விஜய் தொலைக்காட்சியால் சேகரிக்கப்பட்டு, குறைந்த பட்ச வாக்கு சதவீதத்துடன் போட்டியாளர்கள் வெளியேறுவதைக் வார இறுதியில் கமல் அறிவிப்பார். எனவே இந்த வார நாமினேஷனில் தப்பிக்க போவது யார், யார் வெளியேற போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் மிகுந்துள்ளது.