வலியில் துடிக்கும் கண்ணம்மா – பிரசவம் பார்ப்பாரா பாரதி?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0
barathi kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு நல்ல படியாக குழந்தை பிறக்குமா?? வெண்பா சதியில் இருந்து கண்ணம்மா மீள்வரா?? என்பதே இன்றைய எபிசோடில் ட்விஸ்டாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய கண்ணம்மா எங்கு செல்வது என்று தெரியாமல் நடந்து போயிக்கொண்டுள்ளார். வெண்பாவின் அடியாளிடம் இருந்து எப்படியோ தப்பித்து செல்லும் கண்ணம்மாவிற்கு பிரசவ வலி ஏற்படவே மயக்கமடைகிறார். அப்பொழுது கண்ணம்மாவை தேடி அந்த பக்கமாக வரும் சௌந்தர்யா அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.

barathi kannama

ஆனாலும் கண்ணம்மா மயக்க நிலையிலேயே இருக்கிறார். மருத்துவமனையில் சௌந்தர்யா உதவியால் படித்து நர்ஸ் வேலை பார்க்கும் ஒரு பெண் உதவி செய்கிறார். இந்நிலையில் வெண்பாவிற்கு கால் செய்து கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்க்க அழைக்கிறார் சௌந்தர்யா. மேலும் வெண்பாவும் வந்து விட அகில் அவரை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

barathi kannama

மேலும் சௌந்தர்யாவிடம் இவளை எதற்கு அழைத்தீர்கள் என்று சண்டையிடுகிறார். வெண்பா தான் பாரதியிடம் கண்ணம்மாவை பற்றி தவறாக கூறி பிரித்தது என்று கூறி ஆத்திரமடைகிறார். வெண்பா அங்கிருக்கும் சிசிடிவியில் எதுவும் பதிவாகாமல் அனைத்தையும் உடைத்து விடுகிறார். பிரசவம் பார்க்க உள்ளே சென்ற வெண்பா அங்கிருக்கும் நர்சை மருந்து வாங்க வெளியே அனுப்புகிறார்.

barathi kannama

கண்ணம்மாவை பார்த்த வெண்பா என் கையில் சாக போகிறாயே!! என்று கூறி சிரிக்கிறார். கண்ணம்மாவிற்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்டிவிட்டு அவரை கொல்ல முயற்சிக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

barathi kannama

மேலும் மயக்கத்தில் இருந்து எழுந்த துர்கா கண்ணம்மாவை தேடிக் கொண்டுள்ளார். இப்பொழுது அகில் மற்றும் சௌந்தர்யா வெண்பாவின் சதி திட்டத்தை அறிவார்களா?? கண்ணம்மாவிற்கு நல்ல படியாக பிரசவம் நடக்குமா?? என்பதை வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.

barathi kannama

மேலும் விஜய் டிவி தற்போது ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. மயக்கத்தில் இருந்து கண் விழிக்கும் கண்ணம்மாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு அழுகிறார். அங்கிருக்கும் நர்ஸ் பாரதியை அழைக்கிறார். அங்கிருப்பது கண்ணம்மா என்று தெரியாமல் வரும் பாரதி அதிர்ச்சியடைந்து நிற்கிறார். இப்பொழுது கண்ணம்மாவிற்கு பாரதி பிரசவம் பார்ப்பாரா?? குழந்தையின் முகத்தை பார்த்ததும் பாரதிக்கு உண்மை தெளிவடையுமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here