தமிழகத்தில் அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் அணைகள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அடுத்த 3 நாட்களுக்கு (அக்.26,27&28) தென் தமிழக மாவட்டங்கள் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அடுத்த 24 மணிநேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.