எந்த நியூஸ் சேனலை ஓபன் செய்தாலும் அதில் வனிதா பற்றிய விஷயங்களே அதிகம் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலரும் அவர்களின் கருத்தை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தற்போது வனிதா பீட்டர் பால் விஷயத்தை முதன் முதலில் வெளிப்படுத்திய ரவீந்தர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார்
வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் பீட்டர் பாலை பற்றி எடுத்து கூறியும் வனிதா கேட்கும் நிலைமையில் இல்லை. தற்போது பீட்டர் பாலுக்கும், வனிதாவிற்கும் இடையில் பிரிவு ஏற்பட்டதை அடுத்து அதற்கான காரணத்தை வனிதா வெளியிட்டிருந்தார். அதாவது பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நான் எவ்வளவு கெஞ்சியும் அவர் புகைப்பழக்கத்தையும், குடிப்பழக்கத்தையும் விடுவதாக இல்லை. அதற்கு அவர் அடிமையாகி விட்டார். மேலும் என் மீது இருக்கும் பாசத்தை விட அவருக்கு குடிப்பழக்கம் தான் பெரிதாக தெரிகிறது. எனது வாழ்க்கையில் திருமணம் என்ற அதிர்ஷ்டம் எப்பொழுதுமே கிடையாது போல. பீட்டர் பாலை எலிசபெத் வைத்துக் கொள்ளட்டும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இடையில் வந்த நான் இடையிலேயே சென்று விடுகிறேன் என்று கூறி கண்ணீர் விட்டார். இந்நிலையில் இதற்கு ரவீந்தர் பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் முகநூலில் முதன் முதலாக வனிதா பீட்டர் பால் பிரிவை பற்றி பதிவிட்டதற்கு காரணம் அவரை பழிவாங்குவதற்காக அல்ல. ஒருவர் தப்பு செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்பதை நிரூபிப்பதற்காக தான்.
மேலும் இதே வருத்தத்தை தான் எலிசபெத் அவர்களும் அனுபவித்தார்கள். சிலரை நாம் கண்ணீர் விட வைத்தால் அதன் விலையை நாம் பெற்றே ஆக வேண்டும். வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை. ஆனால் உலகமே எதிர்த்து நிற்க ஒரு அநியாயத்தை செய்தவர்கள் அதன் கர்ம வினையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.