சின்னத்திரை நடிகையான சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் நாளுக்கு நாள் பல மர்மங்கள் வெளியான வண்ணம் தான் உள்ளது இந்நிலையில் தற்போது சித்ராவின் விரல் நகம் தொலைப்பேசி உரையாடல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. தொடர்ந்து தனது நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். ஹேமந்த் என்பவரை காதலித்து வந்த வந்த சித்ரா அவரை பதிவு திருமணமும் செய்துகொண்டார். சித்ரா அந்த பிரபல சீரியலில் நடிப்பது ஹேமந்த்துக்கு பிடிக்கவும் இல்லை. அதிலிருந்து விலகும் படி டார்ச்சர் செய்துள்ளார். இவர் தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் குழம்பி போய் தான் உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சித்ரா பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை தான் செய்துகொண்டார் என்றும் வந்தது. ஆனால் தற்போது அவரின் தற்கொலை வழக்கில் பல மர்மங்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஹேமந்த்தின் உயிர் நண்பரே சித்ராவை ஹேமந்த் கொடுமை செய்ததை வெட்டவெளிச்சம் ஆக்கினார். எதற்கெடுத்தாலும் சித்ராவை அடிப்பது துன்புறுத்துவதுமாக இருப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் தான் மனஉளைச்சல் தாங்காமல் சித்ரா தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
தனது நாயுடன் துள்ளி குதித்து விளையாடும் யாஷிகா – திக்குமுக்காடிய இணையதளம்!!
இந்நிலையில் ஹேமந்த் தனது மீது சுமத்தப்பட்ட புகார் பொய் என்று ஜாமீனுக்கு மனு அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது சித்ராவின் விரல் நகமும், தொலைபேசி உரையாடலும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஆய்வுக்கு உரிய அறிக்கை வரும் வரை இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் ஹேமந்த்தின் ஜாமின் மனு பிப்ரவரி 11 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.