பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா ஆனந்த் படவாய்ப்புகளுக்காக தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது நாயுடன் சேர்ந்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாஷிகா ஆனந்த்
மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். மும்பையை சேர்ந்த இவருக்கு தமிழில் துருவங்கள் பதினாறு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் நடிக்கும் ஆசை இருப்பவர்கள் தமிழ் திரையுலகில் தான் நடிக்க வேண்டும் என்று ஆசை படுவர்.
ஏனெனில் எந்த மொழிகளிலும் இல்லாத விதமாக தமிழ் திரைஉலகில் அவ்வளவு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மக்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் போதும் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதனாலேயே பல நடிகைகள் தமிழில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்படி பட்ட ஒருவர் தாஹ்ன் யாஷிகா ஆனந்த். தனது பள்ளிப்பருவத்திலேயே படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது அவருக்கு 21 வயதாகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவருக்கு கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. இவரால் வீட்டில் பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும் கேம் என்று வந்தால் தனது முழு திறமையையும் காட்டி இருந்தார் யாஷிகா.
இவரும் அவரது தோழியுமான ஐஸ்வர்யாவும் செய்த காரியம் கொஞ்ச நஞ்சமா?? பல சர்ச்சைகளில் சிக்கி வந்தனர். கமலே அவர்களை திட்டும் அளவிற்கு நடந்துக்கொண்டனர். வீட்டை விட்டு வெளியேறிய படவாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை என்று தான சொல்ல வேண்டும்.
‘பேரறிவாளன் குறித்து குடியரசு தலைவரை சந்தித்தால் திமுக உடன் வர தயார்’ – ஸ்டாலின் அறிவிப்பு!!
தற்போது வரை எப்படியாவது ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் போராடி வருகிறார். தினசரி போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடும் யாஷிகா தற்போது தனது நாயுடன் துள்ளி விளையாடும் விடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் கிறங்கி தான் போயுள்ளனர். அந்த விடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.