அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

கிழக்கு திசை காற்றலை காரணமாக 30.01.2021 முதல் 02.02.2021 வரை தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே இருக்கும். மேலும் வரும் 03.02.2021 அன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே நிலவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காட்சியளிக்கும். மேலும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டமாக காட்சியளிக்கும். அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!!

கடந்த 24 மணி நேரத்தில் திருவையாறு பகுதியில் 1 சென்டிமீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது. மேலும் வரும் 01.02.2021 முதல் 03.02.2021 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வட கிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here