தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நிலவும் வானிலை குறித்த தகவலை தற்போது சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
இன்று மற்றும் நாளை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 06.03.2021 மற்றும் 07.03.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மீதமுள்ள மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதுபோல் வருகிற 08.03.2021ம் தேதி அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொல்கத்தாவில் ரூ.1,000க்கு விற்கப்படும் தேநீர் – அதிர்ச்சியில் மக்கள்!!
மீதமுள்ள மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்ப நிலையாக 34 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.