உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, பாதுகாப்புக்காக தாஜ்மஹாலிலிருந்த பார்வையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்
ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவிலுள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலுக்கு நாள்தோறும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், வெவ்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தின் அவசர உதவி எண்ணான 112ஐ தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘கண்ணம்மாவை கொஞ்ச கொஞ்சமா கொல்றதுக்கு ஒரேடியா சாகடிச்சிடு’ – கோவத்தில் கொந்தளிக்கும் சௌந்தர்யா!!
பலத்த பாதுகாப்புகள் இருக்கின்ற போதிலும் இப்படிப்பட்ட அதிர்ச்சியான தகவல் கிடைத்ததும், உத்திரபிரதேச காவல்துறை, தொழிற்பாதுகாப்பு படைக்கு தகவல் அனுப்பியது. உடனடியான இன்று காலை 9.15 மணியளவில் தாஜ்மஹாலிலிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்ட பின்பு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொலைபேசி அழைப்பு போலியானது என்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து உத்திரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியிலிருந்து அழைப்பு வந்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.