‘கண்ணம்மாவை கொஞ்ச கொஞ்சமா கொல்றதுக்கு ஒரேடியா சாகடிச்சிடு’ – கோவத்தில் கொந்தளிக்கும் சௌந்தர்யா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதியின் மனதை மாற்ற எவ்வளவோ எடுத்து பேசுகிறார் சௌந்தர்யா. அடுத்ததாக அஞ்சலி வீட்டில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மாட்ட அப்பொழுது பார்த்து ஹேமா அகிலனுடன் வீட்டிற்கு வருகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதியிடம் கண்ணம்மாவையும் உன்னையும் சேர்த்து வைத்து காட்டுவேன் என்று நேற்றைய எபிசோடில் சவால் விட்டு காட்டினார் சௌந்தர்யா. இன்று பாரதி வீட்டில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க சௌந்தர்யா மட்டும் வராததை பார்த்து அனைவரும் வேணுவிடம் கேட்க அவர் மேலே தனியாக இருப்பதாக சொல்கிறார்.

பாரதி சௌந்தர்யாவை அழைப்பதற்காக மேலே செல்கிறார். நேற்று நடந்ததை நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? என்று கேட்க கண்ணம்மாவை கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டியா?? என்று கேட்கிறார். என்னால அவ மேல இருக்க ஒபினியனை மாத்த முடியாது என்றும் சொல்கிறார்.

யுவராஜ் சிங்க் சாதனையை சமன் செய்த பொல்லார்ட் – குவியும் வாழ்த்துக்கள்!!

மேலும் கண்ணம்மாவை நீ இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு மொத்தமா கொன்னுட்டு போயிடலாம் என்றும் சொல்கிறார். ஆனால் எதையுமே பாரதி கேட்பதாக இல்லை. இருவரும் சண்டைபோட்டு கொண்டிருக்கும்போதே ஹேமா மேலே வந்து விடுகிறார்.

இதனை பார்த்த இருவரும் அமைதியாகின்றனர். அடுத்ததாக சௌந்தர்யாவை அழைத்து கொண்டு செல்கிறார் ஹேமா. அஞ்சலியின் வீட்டில் அவரது அப்பா ஷண்முகம் பாரதி கண்ணம்மாவின் கல்யாண புகைப்படத்தை வீட்டில் மாட்டுகிறார். இதனால் கடுப்பாகும் அஞ்சலியின் அம்மா அதனை எடுத்து வெளியே வீச செல்ல இருவருக்கும் சண்டையாகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் போட்டோவை எடுத்துக்கொண்டு மாடிக்கு செல்கிறார். இந்த பக்கம் வழக்கம் போல பாரதி வெண்பாவிடம் சென்று நடந்ததை நினைத்து புலம்புகிறார். அதன் பின் ஹேமா கால் செய்ய அங்கிருந்து கிளம்புகிறார். ஹேமாவையும் இவனையும் முதலில் பிரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார் வெண்பா.

இங்கு பாரதி வீட்டில் அஞ்சலிக்கு அம்மா வீட்டிற்கு போக வேண்டும் போல இருக்க அகிலனும் அஞ்சலியும் சௌந்தர்யாவிடம் கேட்கின்றனர். ஹேமா தானும் வருவதாக சொல்கிறார். ஹேமா வருவது அஞ்சலியின் அம்மாவிற்கு பிடிக்கவும் இல்லை. பாசமாக பேசுவது போல நடிக்கிறார்.

மேலே ஷண்முகம் கண்ணம்மா பாரதி புகைப்படத்தை வைத்து கொண்டுள்ளார். மேலே அகிலனும் ஹேமாவும் செல்கின்றனர். அந்த போட்டோவை ஹேமா பார்ப்பாரா?? பார்த்தால் என்ன நடக்கும் என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here