தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் மற்றும் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை குறித்த தகவலையும் தற்போது தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற 30.03.2021 முதல் வருகிற 02.04.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி 3செமி, போடிநாயக்கனூர் மற்றும் செங்கோட்டை தலா 2 செ.மீ, சூரழகோடு மற்றும் ஆயக்குடி தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு – முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்றம்!!

இன்று தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். நாளை தென்கிழக்கு மற்றும் நாளை மறுநாள் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here