அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

0

அடுத்த நான்கு நாட்களில் தமிழகத்தில் எந்த மாதிரியான வானிலை நிலவும் என்பது பற்றியும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல ஏதேனும் எச்சரிக்கை உள்ளதா என்பதை பற்றியும் தற்போது வானிலை மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வானிலை நிலவரம்:

வானிலை மையம் வெளியிட்ட தகவலின் படி வரும் 12.02.2021ம் தேதி முதல் 16.02.2021 தேதி வரை அதாவது அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

4வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய காலை நிலவரம்!!

மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும். அதுமட்டுமல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் மழை எதுவும் பதிவாகவில்லை. மேலும் கடலில் தற்போது சுமுகமான நிலை நிலவுவதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here