இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்சிலும் சொதப்பினார். இந்நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் கூறியதாவது, ரோஹித் சர்மா தனது பேட்டிங் ஸ்டைலை மாற்ற கூடாது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா:
இந்தியா அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகள்பவர் தான் ரோகித் சர்மா. இவரை ரசிகர்கள் ஹிட் மேன் என்று அழைத்து வருவார்கள். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பலாக விளையாடினார். இதன் மூலம் இவரது பேட்டிங் மீது பல விமர்சனங்கள் கிளம்பியது. தற்போது இதுகுறித்து இந்தியா அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த் பேட்டியளித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர் பேட்டியில் கூறியதாவது ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த வீரர். அவர் களத்தில் நின்று விட்டால் போதும் அவரை அவுட் ஆக்குவது மிக பெரிய சிரமம். மேலும் அவர் டெஸ்ட் போட்டிக்காக தனது இயல்பான பேட்டிங் ஸ்டைலை மாற்றி அமைக்க கூடாது. அவர் ஒரு தலை சிறந்த வீரர். தன்னுடைய வேலையை எந்த முறையில் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். அதனை அவர் சிறப்பான முறையில் செய்து முடிப்பார்.
சொந்த செலவில் கட்அவுட் வைத்துக்கொண்ட ரம்யா பாண்டியன் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
மேலும் போட்டியில் அவரது உடலை நெருங்கி வரும் பந்தை அவர் அடித்து விளையாட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தை அவர் சற்று பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும் வெளியே செல்லும் பந்துகளை அவர் அடித்து விளையாடுவதால் தான் அவர் எளிதில் ஆட்டமிழக்குகிறார். இதனை மட்டும் அவர் கவனித்து கொண்டால் போதும். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் வைத்து துவங்குகிறது.