சொந்த செலவில் கட்அவுட் வைத்துக்கொண்ட ரம்யா பாண்டியன் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

பிக்பாஸ் புகழ் நடிகை ரம்யா பாண்டியன் அவரது சொந்த செலவில் கட்அவுட் வைத்து அதற்கு பால்அபிஷேகம் செய்கிறார் என வலைத்தளத்தில் நெட்டிசன்கள் ரம்யா பாண்டியனை கலாய்த்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியன்

‘ஜோக்கர்’ மற்றும் ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரம்யா பாண்டியன். திரைப்படங்களில் கிடைக்காத பெயரும் புகழும், இவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட மொட்டைமாடி புகைப்படங்கள் பெற்று தந்தது மறுக்க முடியாத ஒன்று. அந்த போட்டோஷூட்டுக்கு பின்னாகத்தான் இவர் யார் என்றே ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

‘இந்தியாவில் 22 மாதங்களாக ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழக்கவில்லை’ – ரயில்வே மந்திரி தகவல்!!

கடந்த ஆண்டு விஜய் டிவியில் வெளியான ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் நடிகை ரம்யா பாண்டியன். இதனால் அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று வரை விளையாடி வெளியேறினார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனித்துவமான விளையாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் ‘சிங்கப்பெண்’ என்ற சிறப்பு பட்டம் அவருக்கு கிடைத்தது. கடந்த வாரம் விஜய் டிவியில் வெளியான ‘பிக்பாஸ் கொண்டாட்ட’ம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன். நிகழ்ச்சியின் போது ரம்யா பாண்டியனுக்கு அவரது ரசிகர்கள் கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை ரம்யா பாண்டியன் தனது வலைதளபக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘பணம் இருக்கிறது என்பதற்காக சொந்த செலவில் கட்அவுட் வைத்துக்கொண்ட சிங்கப்பெண்’ எனவும் ‘இந்த சிங்கப்பெண் அப்படி என்ன செஞ்சாங்க?’ எனவும் வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here