ஐபிஎல் மினி ஏலம் – இறுதி பட்டியலில் இடம்பிடித்த 292 வீரர்கள்!!

0

தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிக்காக வரும் 18ம் தேதி மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களின் இறுதி பட்டியலில் மொத்தம் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது இது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்:

ஆண்டு தோறும் இந்தியாவில் வைத்து சிறப்பாக நடைபெறும் போட்டி தான் ஐபிஎல். இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆண்டில் மெகா ஏலம் நடத்த காலம் இல்லாத காரணத்தினால் மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவெடுத்தது. அதன்படி வரும் 18ம் தேதி அன்று சென்னையில் வைத்து மாலை 3 மணி அளவில் மினி ஏலம் தொடங்குகிறது. இதற்காக முதற்கட்டமாக 1,097 வீரர்கள் தங்களது பெயரை ஏலத்திற்காக பதிவு செய்தனர். தற்போது அதற்கான இறுதி பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

1,097 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியலில் இருந்து அனைத்து அணிகளும் தங்களது விருப்பமான வீரர்களை தேர்வு செய்தனர். இதன் மூலம் தற்போது இந்த இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த இறுதி பட்டியலில் மொத்தம் 292 வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். மேலும் இவர்களின் ஏலம் முடிந்த பின்பு இதில் இடம் பெறாத வீரர்களையும் அணிகள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். இந்த 292 வீரர்களில் முதற்கட்ட பட்டியலில் இடம் பெறாத 17 வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

விரைவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரொமான்டிக் சீன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அந்த 17 வீரர்களை அணிகளின் விருப்பத்திற்கேற்ப சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் 292 வீரர்கள் 164 இந்திய வீரர்களும் 125 வெளிநாட்டு வீரர்களும் மற்றும் 3 அசோசியேட் நாடுகளை சேர்ந்த வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். மேலும் அடிப்படை தொகை கொண்ட ரூ.1 கோடிக்கான பட்டியலில் 2 இந்தியா வீரர்கள் உட்பட 11 வீரர்கள் இடப்பெற்றுள்ளன. மேலும் ரூ.1.5 கோடிக்கான பட்டியலில் 12 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் ரூ.2 கோடிகள் பட்டியலில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உட்பட 10 வீரர்கள் இடப்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here