தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்த விஜயகாந்த் – பரப்புரையை துவக்கம்!!

0

இன்று தேமுதிகவின் கொடி நாள் என்பதால் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை வாகனத்தில் சென்று மக்களை சந்தித்தனர். அப்போது விஜயகாந்த் தனது தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்.

தேமுதிக:

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பரப்புரை வேலையை நடத்தி வருகின்றனர். மேலும் சட்டமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்து கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். மேலும் சட்டமன்ற தேர்தல் தேதியை டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். தற்போது இன்று தேமுதிக கட்சியின் கொடி நாள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை முன்னிட்டு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சியின் அலுவலகத்தில் தேமுதிக கொடியை ஏற்றிவிட்டு பரப்புரை வாகனத்தில் மக்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தும் மக்களை சந்திப்பதற்காக சென்றார். விஜயகாந்த் வாகனத்தில் இருந்த படியே மக்களை சந்தித்து தனது கையை அசைத்தார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு வந்த ஒரு தொண்டர் தனது குழந்தைக்கு பெயர் வைக்கும் படி விஜயகாந்திடம் கூறினார்.

ஐபிஎல் மினி ஏலம் – இறுதி பட்டியலில் இடம்பிடித்த 292 வீரர்கள்!!

உடனே விஜயகாந்த் தனது பெயரையும் தனது மனைவி பெயரையும் சேர்த்து விஜயலதா என்று அந்த குழந்தைக்கு பெயர் வைத்தார். அதன்பிறகு தொடர்களை பார்த்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் விரைவில் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் தனது பரப்புரையை பணிகளை துவங்குவார் என்று கூறினார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here