இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இனிவரும் நாட்களில் வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை வழங்கி உள்ளதால் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.
மாநில அரசுகள் கோரிக்கை:
ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் சில வாரங்களுக்கு நீட்டிக்குமாறு மாநில அரசுகள் மற்றும் நிபுணர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் உணவின்றி தவிக்கும் மக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்தையும் சரிசெய்ய வேண்டி இருக்கும்.
இந்தியாவில் 5000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிர் இழப்புகள்..!
எனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசுகள் பரிசீலனை செய்ய தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |