கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பல தடுப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதனால் திங்கள் இரவு வரை இந்தியாவில் 4460 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 76 சதவீத பேர் ஆண்கள் மற்றும் 24 சதவீத பெண்கள் என சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தியாவில் 114 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 325 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களில் 63 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 30 சதவீதம் பேர் 40லிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள் மேலும் 7 சதவீதம் பேர் 40 வயதுக்கு குறைந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்கள் கொரோனா பாதிப்பு கடினமான இருக்கும். வர போகும் இரு வாரங்களை கட்டுப்படுத்திவிட்டால் அதிக அளவிலான பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |