ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீட்டை சரி செய்யும் வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளிச்சந்தையில் இருந்து கடன் பெற்று கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதன் மூலமாக தமிழக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையாக பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
கடன் தொகை:
ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு குறிப்பிட்ட தொகையினை ஜிஎஸ்டி வரி வருவாயினை சரிக்கட்டும் வகையில் வழங்கி வருகின்றது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா கால பொது முடக்கத்தால் இழப்பீடு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல் இதற்கு தீர்வு காணும் வகையில் சமீபத்தில் நடத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!
அதன் முடிவாக, மாநில அரசுகள் வெளிச்சந்தைகளில் கடன் பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பல மாநிலங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இது மாநிலங்களின் தனிப்பட்ட முடிவு என்று கூறியது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் கடன் பெற விருப்பம் தெரிவித்து இருந்தது. அதில் தமிழக அரசும் ஒன்று. தமிழக அரசு 9,627 கோடி கடன் பெற தெரிவித்து இருந்தது.
கடன் பெற அனுமதி:
அதனால் தற்போது மத்திய நிதியமைச்சகம் வெளிச்சந்தைகளில் கடன் பெற்று கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்னதாக தமிழக அரசு மத்திய அரசுடன் 4 ஆயிரத்து 321 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையாக வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.