நாட்டில் தடுப்பூசி பணிகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது இதுகுறித்து மத்திய அரசு அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி:
இந்தியாவில் தற்போது அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முழு வீச்சில் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு இதுகுறித்து அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தெரிவித்ததாவது, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பின்பே தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நீங்க யாரும் பார்த்திராத தளபதி விஜய்யின் அழகிய குடும்பம் – ட்ரெண்டாகும் புகைப்படம்!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றவர்கள் கொரோனவினால் பாதிக்கப்பட்டால் தனது இரண்டாவது டோசினை 3 மாதங்களுக்கு பின்பு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் வேறு நோய்களுக்கு தீவிர சிகிச்சை எடுத்து வருபவர்கள் 4 முதல் 8 வாரங்கள் வரை தடுப்பூசி போடுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.