இன்று காலை நடிகர் சுஷாந்த் சிங் காதலியான ரியா சகர்ப்பதியிடம் சி.பி.ஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினர்.
சுஷாந்த் மரணம் தற்கொலை அல்ல கொலை:
கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்தில் பல சர்ச்சைகளும் பல சந்தேகங்களும் எழுந்து வந்தன.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். அவர்கள் சுஷாந்தின் காதலி மற்றும் இந்தி பட நடிகையான ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் சுஷாந்த் மரணத்திற்கு காரணம் என்று கூறினர். காரணம், சுஷாந்த் தற்கொலை செய்வதற்கு 6 நாட்களுக்கு முன் ரியா அவரை விட்டு சென்றுள்ளார்.
சி.பி.ஐ விசாரணை:
கூடுதலாக, அவரது தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவரது தற்கொலை வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
தென்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
முதல்கட்டமாக, ரியா , ரியாவின் தந்தை மற்றும் ரியாவின் சகோதரர் ஆகிய மூவரையும் இன்று அதிகாரிகள் விசாரித்தனர்.
என்ன என்ன கேள்விகள்:
முதலில் ரியாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது பதில்களை சி.பி.ஐ விசாரணை குழு தலைவர் நுபுர் பிரசாத் பதிவு செய்தார். ரியா மற்றும் அவரது சகோதரரிடம் தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்,
- சுஷாந்த் மரணம் அடைந்த செய்தி உங்களுக்கு எப்படி தெரியும்?
- செய்தியை அறிந்தபோது எங்கு இருந்தாய்?
- ஜூன் 8 ஆம் தேதி ஏன் அவரை விட்டு சென்றாய்?? ஏதெனும் சண்டையா??
- ஜூன் 8 ஆம் தேதிக்கு பிறகு அவரை தொடர்ப்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டதா??
- அவர் உங்களை ஜூன் 8 ஆம் தேதிக்கு பின் தொடர்பு கொள்ள முயற்சித்தாரா??
- உங்களுக்கும் சுஷாந்த் குடும்பத்தினருக்கும் எப்படியான தொடர்ப்பு உள்ளது??
இது போன்ற கேள்விகள் ரியாவிடம் இன்று முதல்கட்டமாக கேட்கப்பட்டது. அவரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.