நவகிரகங்களில் யோகக்காரனான சுக்ரன் அருளை பெறுவதற்கு சில வழிபாடுகள் உள்ளன. அவரின் அருளை பெற என்ன வழிபாடுகள் செய்ய வேண்டும்?? எந்த கிழமைகளில் செய்ய வேண்டும்?? போன்ற தகவலை பாப்போம் வாங்க.
சுக்கிரன்
யாராவது ஒருவருக்கு யோகம் அடித்தாலோ அல்லது தொடர்ந்து வெற்றி கிடைத்தாலோ அவர்களுக்கு சுக்கிர யோகம் அடித்துள்ளதாக கூறுவோம். அப்படி சுக்ரன் அருளை பெற்றுவிட்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
பண கஷ்டம், குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை வலுப்படும். கடன்தொல்லை நீங்கும். அப்படிப்பட்ட சுக்ரனை வெள்ளி கிழமை தோறும் வழிபட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.
வழிபாடு
வெள்ளிக்கிழமை காலை 6 லிருந்து 7.30 மணிக்குள் அருகிலுள்ள நவகிரக கோவிலுக்கு சென்று சுக்ரனை வழிபட்டு வர வேண்டும். அந்த சன்னிதியில் அமர்ந்து ‘ஓம் சுக்ராய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து மனதில் உள்ள கஷ்டங்களை கூறினால் கட்டாயம் நல்ல பலன் கிட்டும்.
வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற உடைகளை அணிவது சிறப்பு. சுக்ரனுக்கு பொங்கல் நெய்வேதியமாக படைத்து வழிபட்டால் நல்ல பலனை பெறலாம். சுக்ரனுக்கு உகந்த நட்சத்திரமான பூரணி, பூசம், பூராடம் போன்ற நட்சத்திர தினங்களில் சுக்ரனை நினைத்து வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் ‘ஓம் சுக்ராய நம’ என்ற மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் காலையில் உச்சரித்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். சகல சௌபாக்யங்களுடன் வாழலாம்.