நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
கேப்டன் மில்லர்:
கடந்த சில ஆண்டுகளாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் வெற்றியை தொடாத நிலையில், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தனுசுக்கு ரி என்ட்ரி ஆக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படம் வசூல் சாதனையை படைத்தது. மேலும் அவருக்கு வெளியாக இருக்கும் நானே வருவேன், வாத்தி போன்ற படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் நானே வருவேன் திரைப்படம் வருகிற செப் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது.
விருப்பமே இல்ல., வற்புறுத்தி இப்படி பண்ண வச்சுட்டாங்க – நடிகை பிரியாமணி பகிரங்க புகார்!!
இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் தொடங்காமல் இருந்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் பட பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற செப் 28ம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த வருடம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.