பெண்கள் பொதுவாக மிக அழகாக தெரிவது மணக்கோலத்தில் தான். ஆனால் அன்றைய நாள் நாம் பிஸியாகவே உள்ளதால் எளிதில் சோர்வடைகிறோம். இதனால் மேக்கப் களைந்து விடுகிறது. மேக்கப் இல்லாமலேயே ஜொலிக்க சில வழிமுறைகள் உள்ளன.
டிப்ஸ்
நாம் எவ்வளவு தான் முகத்திற்கு பல அழகு சாதனங்களை பயன்படுத்தினாலும் நாம் சாப்பிடுவதிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளும் நம் முகத்தை ஜொலிக்க வைக்க உதவும்.
திருமணத்திற்கு 1 மாதத்திற்கு முன் வரை நாம் சில வரைமுறைகளை பின்பற்றினால் மேக்கப் போடாமலே நமது முகம் பளபளப்பாகும். முதலில் நாம் தண்ணீர் அதிகமாக குடிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, கொத்தமல்லி, கேரட் சேர்த்து சாறு எடுத்து குடித்து வர வேண்டும். இதனால் வயிறு சுத்தமடைகிறது. முகத்திலும் பொலிவு ஏற்படுகிறது.
முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறைய தக்காளி, சர்க்கரை, மஞ்சள் போன்றவற்றை எடுத்து தக்காளியை இரண்டாக நறுக்கி சர்க்கரையில் தடவி அதனை முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். திரும்பவும் மஞ்சளில் தடவி முகத்தில் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறைந்து பொலிவு பெரும்.
இதன் பிறகு கடலை மாவு, பால், கஸ்தூரி மஞ்சள், தேன் இவற்றை கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழிவு வர வேண்டும். இவ்வாறு 2 நாளுக்கு ஒரு தடவை செய்து வந்தால் முகம் பளிச்சிடும். தினமும் 4 பாதம் சாப்பிட்டு வர வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தக்காளி அல்லது பீட்ருட் ஜூஸ் குடிக்கலாம். அசைவ உணவுகளை தவிர்க்கலாம். உடற்பயிச்சி மேற்கொள்வதால் உடல் பருமன் ஏற்படாமல் இருக்கும்.