கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரஷிதா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விக்ரமன் குறித்து பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் ரஷிதா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ரஷிதா. சமீபத்தில் உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பிக் பாஸ் சீசன் 6 ல் இவர் நுழைந்ததில் இருந்து சேவ் கேம் விளையாடும் போட்டியாளராகவே இருந்து வந்தார் என்று ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் குற்றச்சாட்டு வைத்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் அவர் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக தகுதி இல்லாதவர் என்று இதற்கு முன் வெளியே வந்த போட்டியாளர்கள் சொன்னது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் நந்தினி வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென நடிகை ரஷிதா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெளியே வந்த ரஷிதா சமீபத்தில் போட்டியாளர்கள் குறித்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் விக்ரமனுக்கு ஏன் காப்பி போட்டு கொடுக்கவில்லை என்று கேள்வி ஏழுப்பப்பட்டது.
விஜய்க்கு இந்த துக்கம் இன்னும் இருக்கு., 3 வயசுல நடந்த இத மறக்கவே முடியாது! தளபதி பெற்றோர் கண்ணீர்!!
அவர் கூறியதாவது, இல்லைங்க, வீட்டில இருக்க எல்லோருக்கும் சேர்த்து நான் சமையல் செய்கிறேன், டீ மற்றும் காப்பி போடுகிறேன். இது தான் என்னோட வேலை. ஆனால் விக்ரமன் மற்றும் அமுதவாணன் திடீரென காபி வேணும், பால் வேணும் என்று சொல்லி என்கிட்ட கேட்பார்கள். அதான் உங்களுக்கு காபி வேணும்னா நீங்கள் போட்டு குடியுங்கள். என்னை ஏன் போட சொல்கிறீர்கள் என்று கேட்டேன் என்று கூறினார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு போட்டு கொடுக்கணும் என்று எனக்கு கட்டாயம் இல்லையே என்று தெரிவித்தார்.