மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் வர மாட்டார்கள் என்றும், இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு :
அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்து கடந்த 2004ம் ஆண்டு பங்களிப்பு பென்ஷன் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர கோரி, தமிழகம் உட்பட பல மாநில ஊழியர்களும் போராடி வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் மத்திய அரசின் ஆயுதப்படை காவல் பிரிவான (CAPF )வீரர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை., ரூ.7.01 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு!!
இந்திய ஆயுதப் படைகளில், மத்திய ஆயுத காவல் படையான CAPF ம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இனி இவர்களும் பழைய ஓவிய திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்று அறிவித்துள்ளது. இதுவரை பணியில் இருக்கும் ஊழியர், இனி பணியில் சேர்வோர் என அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது.