மலேசிய ஓபன் பேட்மிண்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய H S பிரணாய்!!

0
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய H S பிரணாய்!!
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய H S பிரணாய்!!

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் H S பிரணாய் இந்தோனேஷியா வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மலேசிய ஓபன் பேட்மிண்டன்:

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் முன்னணி வீரர்களான H S பிரணாய், பி வி சிந்து, லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர். இதில், பி வி சிந்து, லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்து வெளியேறினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களில், சக நாட்டு வீரரான லக்ஷ்யா சென் வீழ்த்திய H S பிரணாய் இன்று இந்தோனேஷியாவின் த்வி வார்டோயோ வீரரை எதிர்கொண்டார். இதில், H S பிரணாய் முதல் செட்டை 21-9 என அபாரமாக கைப்பற்றினார். ஆனால், 2வது செட்டை 15-21 என்ற கணக்கில் H S பிரணாய் இழக்க, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது செட்டுக்கு போட்டி நகர்ந்தது.

உலக கோப்பைக்கு தயாரான இந்திய இளம் படை…, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் யுத்தம்!!

இதில், அதிரடியாக விளையாடிய H S பிரணாய் 21-16 என கணக்கில் கைப்பற்றியதுடன், 2-1 போட்டியையும் வென்றார். இதே போன்று, மகளிருக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி பல்கேரியா வீராங்கனைகளிடம் (21-13, 15-21, 21-17) 1-2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here